;
Athirady Tamil News

மகாவலி ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

0

கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்று ஆற்றின் கரையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 15,000 ரூபாய் பணமும் மேலும் சில மருந்துப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ, குறித்த பெண் தொடர்பான செய்திகள் சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குருவிட்ட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குருவிட்ட குருகங்கையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவருக்கு சுமார் 70 வயது இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.