;
Athirady Tamil News

தனிமையில் இருந்து மூதாட்டி கொலை!

0

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய ´சுலைமான் செய்யது புஹாரி´ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது தாயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் குறித்த மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.