;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ்ப்பாண சங்கம்!! (வீடியோ)

0

இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் நடமாடும் நீதிச் சேவை முகாமில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொள்ளவேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ்ப்பாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாம் எங்கள் உறவுகளை தொலைத்து 12 வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றோம். அதற்கான நீதியை பெற்று தருமாறு நாம் சர்வதேசத்திடம் கேட்டுள்ளோம். எங்கள் கைப்பட பல ஆவணங்களை அனுப்பியுள்ளோம்.

ஆகவே இப்போது நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை முகாமில், காணாமல் ஆகக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எந்த விடயங்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

வேறு ஏதும் விடயங்கள் இருந்தால் அதற்கு மட்டும் அங்கே செல்லுங்கள். கழுத்தை அறுத்து கொலை செய்தவர்களுக்கு எல்லாம் மன்னிப்பு வழங்கியுள்ள அரசு. எங்கள் உறவுகளுக்கு என்ன முடிவு?.

எமது உறவுகளை இழந்து 13 ஆவது வருடம் ஆகிறது. இன்னமும் நாம் கண்ணீருடன் தான் நாட்களை கழிக்கின்றோம்.

3 ஜனாதிபதியை நாம் பார்த்து விட்டோம். கொடுத்த அறிக்கைகள் எங்கே என்று தெரியாது. இந்த அரசிடம் நீதி கிடைக்காது.

ஆகவே சர்வதேசத்தின் அழுத்தத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

ஆகவே அவர்களின் சேவை முகாமுக்கு போக வேண்டாம். ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் தெற்கில் ஒரு சட்டம் வடக்கில் ஒரு சட்டம் இது தான் உண்மை.- என்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.