;
Athirady Tamil News

அதிவேகம் காரணமாக இளைஞன் உயிரிழப்பு!!

0

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதியில் நுழைந்து கொண்டிருந்த போது லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் காலி அம்பேகம பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மிஹி நிர்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.