;
Athirady Tamil News

சுகாதார பிரிவினர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை!!

0

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறான நீண்ட விடுமுறையில் பயணிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர் முடிந்தவரை பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க முயற்சிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட போதிலும் இதுவரையில் 5 மில்லியன் பேர் மட்டுமே மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.