;
Athirady Tamil News

ஓமைக்ரானை விட ‘ஓ மித்ரோன்’ ஆபத்தானது- பிரதமர் மோடியை விமர்சித்த சசி தரூர்…!

0

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அடிக்கடி ‘ஓ மித்ரோன்’(நண்பர்களே) என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரானை விட ஓ மித்ரோன் ஆபத்தானது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து சசி தரூர் ட்விட்டரில் கூறியதாவது:-

ஓமைக்ரானை விட ‘ஓ மித்ரோன்’ மிகவும் ஆபத்தானது. பா.ஜ.க. ஆட்சியில் அரசியலமைப்பின் மீதான வெறுப்பு, மதவெறியின் தாக்குதல்கள் மற்றும் நமது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை காண்கிறோம்.

சமூகத்திற்கு இடையேயான பிளவுபடுத்துதலை ஊக்குவிப்பதின் விளைவுகளை நாம் அளவிடுகிறோம். இந்த ஓ மித்ரோன் வைரசில் “லேசான மாறுபாடு” எதுவும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.