;
Athirady Tamil News

ஆசிரிய கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை!! (படங்கள்)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மாசி உத்திர நாளையொட்டி திருவள்ளுவர் குருபூசை இன்று வெள்ளிக்கிழமை 18.02.2022 கலாசாலையில் உள்ள திருவள்ளுவர் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது

தமிழ் சிறப்புக் கற்கை ஆசிரிய மாணவர் இரா. நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை கலாசாலை அதிபர் வீ கருணலிங்கமும் வாழ்த்துரையை பிரதி அதிபர் ச. லலீசனும் நிகழ்த்தினர்

ஆசிரிய மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன

நிகழ்வின் நிறைவில் குரு பூசையை முன்னெடுத்த தமிழ் சிறப்பு கற்கை நெறியை சேர்ந்த ஆசிரிய பயிலுநர்களுக்கு பிரதி அதிபரின் அன்பளிப்பாகப் புத்தக பரிசில்கள் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.