;
Athirady Tamil News

நடத்தையில் சந்தேகம்: மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற கணவர்…!!

0

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பினு(40). இவரது மனைவி சரண்யா(36). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பினு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

சரண்யா இங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் பினுவுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மனைவி வேறு வாலிபருடன் தொடர்பில் இருப்பதாக அவர் சந்தேகித்தார். இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பினு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் தகராறில் ஈடுபட தொடங்கினார்.

நேற்று வெளியில் சென்ற பினு இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, கையில் பெட்ரோல் கேனும் வைத்திருந்தார். நேராக வீட்டிற்குள் சென்று மனைவியை தேடினார். அப்போது அவர் சமையலறைக்குள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்று தான் வாங்கி வந்த பெட்ரோலை மனைவியின் மீது ஊற்றினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து ஓட முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே பினு, மனைவியின் உடலில் தீயை பற்ற வைத்து விட்டார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனால் அவர் அலறி சத்தம் போட்டார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

பின்னர் சரண்யாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பினுவை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.