;
Athirady Tamil News

யாழ். சிவகுரு ஆதீனத்தில் நாளை சிவராத்திரி தின நிகழ்வுகள்!!

0

சிவகுரு ஆதீனமும், இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

சிவகுரு ஆதீனம், இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த நிகழ்வு மறுநாள் 6 மணிக்கு நிறைவடையும்.

இதன் போது சிவலிங்கப் பெருமானுக்கு அடியார்கள் தங்கள் கைகளினாலே அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சிவலிங்கப்பெருமானுக்கு நான்குகாலப் பூஜைகள், பஜனை,கலைநிகழ்வுகள்,ஆன்மீக அருளுரை போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் அடியார்கள் அனைவரும் இச்சிவராத்திரி நிகழ்வில் பங்குபற்றி எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் அருளினைப் பெறுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம் என ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.