;
Athirady Tamil News

ஐஸ் போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!

0

காத்தான்குடியில் இருந்து வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றி ஐஸ் போதை பொருளை வாங்கி கொண்டு சென்ற ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை காத்தான்குடியில் வைத்து நேற்று (27) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிசார் கடற்படை புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த இளைஞனை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் தனது உடலில் மநைத்து வைத்து எடுத்துச் சென்ற 5 கிராம் 110 மில்லிக்கிராம் கொண்ட ஐஸ் போதை பொருளையும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி எனவும் இவரை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்து இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.