;
Athirady Tamil News

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா!! (படங்கள்)

0

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வங்கி கிளையில் கொண்டாடப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் சர்வமத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தேசியக் கொடி மற்றும் வங்கிக் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டது.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா கலந்து கொண்டதுடன் வங்கி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள், வங்கி ஒய்வுநிலை உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.