;
Athirady Tamil News

நாளை சில பகுதிகளுக்கு 5 மணித்தியால மின்வெட்டு!!

0

நாட்டில் நாளை (18) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேரமும் பிற்பகல் 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.