;
Athirady Tamil News

உறங்கச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!!

0

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து இன்று (17) மாலை மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் (வயது – 60) என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தனது அறையில் உறங்கியவர் மீண்டும் வௌியில் வராத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் கதவை உடைத்தபோது அவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்தியற்கு விறைந்த பொலிஸார் அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவரது மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.