;
Athirady Tamil News

இந்திய மீனவர்கள் 6 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!!

0

தமிழ்நாடு – ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கைது செய்யும் வேளையும் வலைகளை தொடக்கறுத்து வைத்திருக்காமை ஆகிய இரு குற்றச்ணாட்டுக்கள் நீரியல்வளத்துறையினரால் முன்வைக்கப்பட்டது.

இரு குற்றங்களுக்கும் தலா ஆறு மாத சாதாரண சிறைத்தண்டணை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் படகுக்கான விசாரணை மே மாதம் 27ம் திகதி விசாரணைக்கு வர உள்ளது அன்றைய தினம் படகின் உரிமையாளர் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.