;
Athirady Tamil News

யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

0

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபனால் இன்றைய யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20 திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக பெண்கள் மீது, பொலிஸாரினால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இன்றைய மாநகர சபை அமர்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் சபையில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதனை முதல்வர் வி.மணிவண்ணனால் எற்றுக்கொள்ளப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.