;
Athirady Tamil News

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த குழுவினர் மீது மின்னல் தாக்குதல்!!

0

மாவனெல்ல பிரதேசத்தில் இன்று (26) மாலை இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவனல்லை பாமினிவத்தை மயானத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கியதில் சுமார் 25 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுஆராச்சி தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.