;
Athirady Tamil News

நோயாளர் காவு வண்டி மோதி மாணவி பலி!!

0

தியத்தலாவ – பண்டாரவளை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரை ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ரத்கரச்சி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரர் தற்போது ஆபத்தான நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தியத்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.