;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா…!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,826 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 82 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து. கொரோனா பாதிப்பால் மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 16,187 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய தினத்தை விட 554 குறைவாகும்.

நாடு முழுவதும் இதுவரை 183 கோடியே 20 லட்சம் 10 ஆயிரத்து 30 டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.