;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

0

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டினுள் , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.