;
Athirady Tamil News

நபரை மோதிச் சென்ற மாணவன்!!

0

வயது குறைந்த ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் மீது நபர் ஒருவர் மோதிய காட்சி சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளுப்பிட்டி அல்விஸ் மாவத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் எரிவாயு வரிசையில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறி முதலில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.