;
Athirady Tamil News

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!

0

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர் ரைசினா உரையாடலில் பங்கேற்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை நார்வே தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நார்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நார்வேயும் இந்தியாவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பொதுவான லட்சியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகுதியில் இந்தியாவின் இலக்குகளை நிறைவேற்ற, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தியின் பெரிய அளவிலான வளர்ச்சி தேவைப்படுகிறது.

இதற்காக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச தொழில்நுட்பம் தேவை. இது நார்வே வணிகம் மற்றும் தொழில்துறைக்கு சிறந்த வாய்ப்புகளைத் வழங்குகிறது. எனவே நார்வேவின் பல நிறுவனங்கள் இந்த பயணத்தின்போது பங்கேற்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.