;
Athirady Tamil News

ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறார் நாமல் !!

0

தாம் தொடர்புபடாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனைகள் குறித்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நல்லாட்சி அரசாங்கம் தன்மீது சுமத்திய பல குற்றச்சாட்டுகளுக்காகவே தான் இன்னும் நீதிமன்றத்துக்கு செல்வதாகவும் இதனுடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பல மில்லியன் டொலர் பெறுமதியான வைத்தியசாலைத் திட்டத்துடன் தொடர்புடைய பாரிய ஊழலை அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஆவணப்படத்தின் மூலம் வெளியிட்டிருந்தது, அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (03) பதில் பதிவிட்டிருந்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை நாமல் தெரிவித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டத்தை அவுஸ்திரேலியாவின் அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் பெற்றுள்ளது.

அஸ்பென் மெடிக்கலினால் இலங்கைக்கு செய்யப்பட்ட முதல் பரிவர்த்தனையில், இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமான சபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட டச்சு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே மேற்குறிப்பிட்ட பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட 2.1 மில்லியன் அஸ்பென் மூலம் செலுத்தப்பட்ட 4.3 மில்லியன் தொகையின் ஒரு பகுதியாகும் என்றும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா, பல தசாப்தங்களாக இலங்கையின் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமான ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புடையவர் என, ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்சவின் சார்பில் பணம் வசூலித்ததாக நிமல் பெரேரா வாக்குமூலம் அளித்தமையாலேயே 2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் நாளை பதவி விலகுகிறாரா?

மைத்திரி வௌியிட்ட அவசர கடிதம்!

‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)

’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ !!

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம் !!

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை !!

காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி!! (படங்கள்)

புதிய பிரதமர் குறித்து பசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை!!

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

புதிய பிரதமர் – இடைக்கால அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம் !!

காபந்து அரசாங்கத்தை அமைத்து தேர்தலை நடத்தவும் !!

அலரிமாளிகை முன்பாக பதற்றம் !!

நாமல் விடுத்துள்ள கோரிக்கை !!

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

இனி நகரங்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு !!

ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் வழங்கியுள்ள ஆலோசனை !!

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

நாமல் பதிவிட்ட ட்வீட்… ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா?

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு வார கால அவகாசம்!!

ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.