;
Athirady Tamil News

யாழ்.நகரில் மாற்று திறனாளியின் முச்சக்கர வண்டி திருட்டு – தகவல் தெரிந்தால் அறிவித்து உதவுமாறு கோரிக்கை!!

0

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டி யாழ்.நகரில் களவாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு பின்புறமாக உள்ள விக்டோரியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் குறித்த முச்சக்கர வண்டி களவாடப்பட்டுள்ளது.

பச்சை நிறமுடைய PZ – 0305 எனும் இலக்கமுடைய குறித்த முச்சக்கர வண்டி தொடர்பிலான தகவல்கள் அறிந்தால் பொலிஸாரிடமோ அல்லது 0764046965 எனும் இலக்கத்தின் ஊடாக தன்னிடமோ அறிவிக்குமாறு உரிமையாளர் கோரியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.