;
Athirady Tamil News

சிவபூமி அறக்கட்டளை நிர்வாகம் புற்றுநோயாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

0

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறும் நோயாளருக்கான சத்துமா சிவபூமி அறக்கட்டளையினரால் நாளை வியாழக்கிழமை (05-05-2022) அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

எனவே, வசதி குறைந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வைத்திய அத்தாட்சிப் பத்திரத்துடன்(கிளினிக் கொப்பி) கோண்டாவில் கிழக்கு, கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமிப் பாடசாலை மண்டபத்திற்கு வருகை தருமாறு சிவபூமி அறக்கட்டளை நிர்வாக சபையினர் கேட்டுள்ளனர்.

பெண் நோயாளர்கள் காலை-09 மணி முதல் முற்பகல்-11 மணி வரையும், ஆண் நோயாளர்கள் முற்பகல்-11 மணி முதல்-01 மணி வரையும் வருகை தருமாறும் மேற்படி அறக்கட்டளை நிர்வாக சபையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.