;
Athirady Tamil News

யாழ். நகர் பகுதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!! (படங்கள்)

0

நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.