;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க நிதி உதவி !!

0

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

“கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டது. தமிழக அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்து நிதியைக் கையளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.