;
Athirady Tamil News

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள்!! (படங்கள்)

0

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு: வவுனியாவில் வெறிச் சோடிய பாடசாலைகள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகள் பல வெறிச் சோடிக் காணப்பட்டன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (06.05) தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.