;
Athirady Tamil News

எரிபொருள் நிலைய உரிமம் இரத்தாகும் !!

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளின் தரம் தொடர்பிலான பரிசோதனைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் தரம் மற்றும் மண்ணெண்ணெய், தண்ணீர் மற்றும் பிற திரவப் பொருட்களை கலப்பது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே சோதனைகள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.