;
Athirady Tamil News

போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)

0

அரசாங்கத்திற்கு எதிராகவும் , ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் இன்றைய தினம் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்ட இடம் போர்க்களமானது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வந்தவர்கள் இந்த தரப்பினரால் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட இரு தரப்பு மோதலால் இந்நிலைமை ஏற்பட்டது.

இரு தரப்பு மோதலால் 6 பெண்கள் உள்ளிட்ட 173 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக நூற்றுக்கணக்கான விசேட அதிரடிப்படையினரும் இராணுவப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி ஊடகவியலாளர்களும் , வீதியில் சென்றவர்களும் கூட தாக்குதலுக்கு உள்ளாகினர்.

‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் , அவரை பதவியிலிருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதையடுத்து அங்கு திரண்டிருந்த மக்கள் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி அதன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டத்தின் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றில் கடுமையாக தாக்கினர்.

அது மாத்திரமின்றி குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் உடைத்து தகர்த்தப்பட்டு , அவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

‘கோட்டா கோ கம’ வை நோக்கி படையெடுத்த பிரதமரின் ஆதரவாளர்கள்

‘மைனா கோ கம’ மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்ட இந்த தரப்பினர் காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்திற்குள் பொலிஸ் தடையையும் மீறி நுழைந்து அங்கிருந்தவர்கள் மீதும் சாரமாறியாக தாக்குதல்களை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் , மேடைகள் என்பவை உடைத்து தகர்த்தப்பட்டு , அவற்றுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல் ஏற்பட்டது. மோதலால் காயமடைந்த பலரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள்

அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் , அலரி மாளிகைக்குள் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு உள்ளிட்டவற்றை செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.

நேரடி ஒளிபரப்பினை வழங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு பிரதமரின் ஆதரவாளர்களார் தாக்கப்பட்டார். அது மாத்திரமின்றி சம்பவத்தின் போது குறித்த பகுதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களும் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.

கண்ணீர்ப்புகை , நீர் தாரை பிரயோகம்

இவ்வாறு காலி முகத்திடலில் இரு தரப்பினருக்குமிடையிலான மோதல் தீவிரமடைந்ததையடுத்து பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகத்தை மேற்கொள்ள வேண்டாமெனத் தெரிவித்து பௌத்த தேரர் ஒருவர் நீர் தாரை வாகனத்தின் கீழ் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதன் போது அவர் பொலிஸாரினால் பலவந்தமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்ப்பாட்டக்களத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் நிலைமை தொடர்ந்தும் தீவிரமடைந்ததையடுத்து பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். காலி முகத்திடலில் குவிக்கப்பட்ட பாதுகாப்புபடையினர் இரு புறங்களையும் மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபடாதவாறு மறித்தனர்.

எவ்வாறிருப்பினும் இவர்களையும் மீறி தொடர்ந்தும் இரு தரப்பு மோதல் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டதாகவும் , மக்களை அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தாக்குதல்களுக்கு மத்தியில் தொடர்ந்த ஆர்ப்பாட்டம்

இரு தரப்பு மோதல்கள் சற்று தணிந்த நிலையில் , தாக்குதல்களை எதிர்கொண்டமைக்கு மத்தியிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களுடன் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஸ்தலத்தில் குவிந்த சட்டத்தரணிகள்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் மீது இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை அராஜக செயற்பாடு எனத் தெரிவித்து , தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பெருந்திரளான சட்டத்தரணிகள் காலி முகத்திடலில் குவிந்தனர். இதன் போது அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சுற்றி சகல சட்டத்தரணிகளும் கைகோர்த்து நின்றி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட ‘கோட்டா கோ கம’

பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலி முகத்திடலில் வழமைக்கு மாறாக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். அதனையடுத்து குறித்த பகுதியில் முன்னரைப் போன்று மீண்டும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”










குமார வெல்கம மீது தாக்குதல் !!

அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)

பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ, படங்கள்)

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!! (வீடியோ)

அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து!!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் பலி – சிசிரிவி காணொளி!!

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!

மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!

நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!!

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!

அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!

பதற்றத்தில் இலங்கை !!

நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

சற்றுமுன் மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு !!

மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் !!

“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

களத்துக்கு வந்தார் அநுர !!

இன்று தாக்கினால் நாளை வருவேன் !!

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

பிரதமரின் விஷேட உரை !!

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

“மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” அதிரடி அறிவிப்பு !!

இந்த சிக்கலை தீர்க்க இது தான் ஒரே வழி !!

’’உகண்டாவில் பதுக்கி வைத்திருக்கும் புலிகளின் தங்கத்தை கொண்டு வா’’ !!

’அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியம்’ !!

’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!

’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை !!!

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.