;
Athirady Tamil News

சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தாக்குதல்!!

0

வடரெக சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளி நிர்மாணப் பணிகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிறைச்சாலை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைச்சாலை முகாமுக்குத் திரும்பும் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 சிறைக்காவலர்கள் மற்றும் 10 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.