;
Athirady Tamil News

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வட்டரக்க சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தின் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 10 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிலிருந்து நிர்மாணப்பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட 181 கைதிகளில் 58 பேரை காணவில்லையெனவும் இவர்கள் ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அழைத்து வரப்பட்டவர்கள் இல்லை என்பதால் அவர்களை துன்புறுத்துவதை தவிர்க்குமாறும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்முறை நிலைமையைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் இலங்கை முழுவதும் பரவ அமைதியின்மைக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் இருந்த சிலர் பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தாம் வட்டரக்க திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் என அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை அலரிமாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன், இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பல நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வட்டரக்க சிறை அதிகாரிக்கு இது பற்றித் தெரியாது எனக் குறிப்பிடுவது மிகவும் சாத்தியமற்றது என்றும் கூறினார்.

இந்தக் கைதிகளை அழைத்து வருமாறு கண்காணிப்பாளருக்கு யார் பணிப்புரை வழங்கியது என்றும், இதற்கு முன்னரும் கண்காணிப்பாளர் இதைச் செய்தாரா என்றும் சத்குணநாதன் மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”















இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)

இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)

ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல் வீச்சு !! (வீடியோ)

மனைவியுடன் தப்பியோடிய யோஷித? (வீடியோ)

இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கினார்கள்? (வீடியோ)

ஹிமதுவ பிரதேச சபை தவிசாளர் பலி!! (வீடியோ)

தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை!! (வீடியோ)

மஹிந்தவை கைது செய்யுமாறு கோரிக்கை!! (வீடியோ)

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!! (வீடியோ)

ஜனாதிபதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் !!

கடும் பாதுகாப்புடன் வெளியேறினார் மஹிந்த!!

இரத்மலானையை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் !!

தீயிட்டு கொளுத்தப்பட்ட சொத்துக்களின் விபரம் !!!

பாதுகாப்பு செயலாளரின் கோரிக்கை!!

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு !!

அரச பயங்கரவாதம் அகோரமாக அம்பலமானது !!

தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும்!!

மஹிந்த இராஜினாமா: வர்த்தமானி வெளியானது !! (வீடியோ)

இன்று நள்ளிரவு முதல் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!! (வீடியோ)

போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)

குமார வெல்கம மீது தாக்குதல் !!

அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)

பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ, படங்கள்)

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!! (வீடியோ)

அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து!!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் பலி – சிசிரிவி காணொளி!!

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா!!

மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு !!

நிட்டம்புவை சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!!

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் !!

அமைச்சரவையும் கலைக்கப்பட்டது !!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த !!

பதற்றத்தில் இலங்கை !!

நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

சற்றுமுன் மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு !!

மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

துப்பாகியேந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் !!

“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

களத்துக்கு வந்தார் அநுர !!

இன்று தாக்கினால் நாளை வருவேன் !!

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்; ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

பிரதமரின் விஷேட உரை !!

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

“மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” அதிரடி அறிவிப்பு !!

இந்த சிக்கலை தீர்க்க இது தான் ஒரே வழி !!

’’உகண்டாவில் பதுக்கி வைத்திருக்கும் புலிகளின் தங்கத்தை கொண்டு வா’’ !!

’அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியம்’ !!

’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!

’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை !!!

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.