;
Athirady Tamil News

’இராணுவ ஆட்சி மனோநிலை எமக்கில்லை’ !! (வீடியோ)

0

இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சிரமமான விடயமாகும். அதேபோல் இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலையில் நாமும் இல்லை. எனவே இலங்கையால் இராணுவ ஆட்சி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டியதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இராணுவ ஆட்சியை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போதைய இராணுவத் தளபதியின் கீழுள்ள இராணுவத்தினருக்கு இல்லை. இராணுவ ஆட்சியை உருவாக்கும் மனோநிலை எமது இராணுவத்தினருக்கும் இல்லை. நாட்டில் வன்முறைகள் இடம்பெறும்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்படுவார்கள்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் அடுத்த 48 மணித்தியாலங்கள் இலங்கை லிபியாவாக மாறியிருந்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் இந்தியாவின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியின் சுவாமி ‘‘எமது அண்டை நாடான இலங்கை லிபியாவாக மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே இலங்கைக்கு உதவ இந்திய இராணுவம் அனுப்பப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

நாட்டின் எதிர்காலத்துக்கு உதவியவர்களை வீதிகளில் அடித்து சென்றிருந்தனர். அதுபோல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் பலர் தாக்கப்பட்டு இரத்தம் வடிந்ததைக் காணும்போது பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை விட பல மடங்கு வன்மமான நிலைமையை உணர்ந்தேன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிசிடிவி வீடியோக் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்துவோம்.

ஜனாதிபதி செயலகம் முன்பாக வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாது அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களின் வீடுகள், சொத்துக்கள் கொளுத்தப்பட்டன. இதனை நாம் அனுமதிக்க முடியாது. 135 வீடுகள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அரச, பொலிஸ் வாகனங்கள் உள்ளிட்ட 61 வாகனங்களுக்கு பகுதியளவில் சேதமும், 45 வாகனங்கள் முற்றாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு சிலர் வன்முறையை கையில் எடுத்து நாட்டை நாசமாக்குவதையும், பாதுகாப்பு படைகள் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலர் முன்னெடுப்பதையும் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவேதான் 48 மணிநேரம் பொறுமையாக இதனை கால முயட்சித்து முடியாத கட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் வரையில் நடத்த தீர்மானம் எடுத்தோம் என்றார்.




’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’ !! (வீடியோ)

’ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்’ !! (வீடியோ)

பிரதமர் பதவி; பொன்சேகாவுக்கும் அழைப்பு !! (வீடியோ)

சஜித் தாக்கப்பட்ட போதிலும் அனுர ஏன் தாக்கப்படவில்லை ? (வீடியோ)

சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே எதற்காக நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ? – இராணுவ தளபதி!!

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!! (வீடியோ)

ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் !! (வீடியோ)

’தேவைப்பட்டால் சுடுவோம்’ !! (வீடியோ)

அடுத்த பிரதமர் யார்? – 6 மாதங்களுக்குள் தேர்தல் (வீடியோ)

வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !! (வீடியோ)

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !! (வீடியோ)

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல் !!! (வீடியோ)

பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய வங்கி ஆளுனர் (நேரலை)

மூன்று அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்!! (வீடியோ)

இந்தியா படைகள் இலங்கைக்கு? (வீடியோ)

மஹிந்தவை ஜனாதிபதியாக்குக ; அநுர !! (வீடியோ)

நாட்டை பொறுப்பேற்கத் தயார்! (வீடியோ)

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார் !! (வீடியோ)

“பேச்சுவார்த்தைகள் தொடரும்” !! (வீடியோ)

’யானை தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது’ !! (வீடியோ)

நாட்டிற்கு சேவையாற்றத் தயார்: கரு !! (வீடியோ)

’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)

ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)

’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை!! (வீடியோ)

இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் – ஜனாதிபதி அழைப்பு!! (வீடியோ)

எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! (வீடியோ)

பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ)

பொலிஸ் ஜீப்பை கொளுத்த முயற்சி !! (வீடியோ)

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்!! (வீடியோ)

துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!! (வீடியோ)

ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு!! (வீடியோ)

நீர்கொழும்பில் பதற்றம்: வீடுகள் மீது தாக்குதல் !! (வீடியோ)

டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டது !! (வீடியோ)

மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)

வன்முறைகளுக்கு ஐ.நா கண்டனம்!! (வீடியோ)

’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)

மல்வானை அதிசொகுசு வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ)

கங்காராமவில் துப்பாக்கிச் சூடு: பதற்றம்!! (வீடியோ)

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)

இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.