;
Athirady Tamil News

கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது.!! (படங்கள்)

0

அமரர் திரு. மு. பொன்னையா அவர்களின் நினைவாக கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக அன்றைய தினம் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு. க. குவேந்திரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு அவர்களது நிதி உதவியுடன் வவுனியா கற்பகபுரம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் கற்பகபுரம், பாரதிபுரம் பகுதிகளை சேர்ந்த 40 மாணவர்களுக்கு ஒருவருக்கு 1000/= பெறுமானம் உடைய கற்றல் உபகரணங்கள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் காலத்தின் தேவையினை கருத்தில் கொண்டு மரம்நடுகையை ஊக்குவிக்கும் பொருட்டு கற்பகபுரம் கிராமத்தில் 100 தேக்கங்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.