;
Athirady Tamil News

நாளையும் மின்வெட்டு அமுலாகும் !!

0

எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக நாளை (17) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணிநேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.