;
Athirady Tamil News

நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்- பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதம்..!!

0

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் பேசுகையில், நாட்டின் பாதுகாப்புக் கொள்கை வரிசையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை காண்பதாக தெரிவித்தார். நேட்டோவில் அங்கம் வகிக்கும்போது, முறையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஸ்வீடனுக்குத் தேவை. அத்துடன், அண்டை நாடான பின்லாந்துடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

நேட்டோவில் இணைவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், இன்றைய விவாதம் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தை ஸ்வீடன் அரசு இன்று முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.