;
Athirady Tamil News

கடும் காற்றினால் பட்ட தென்னை மரம் வீழ்ந்ததில் முதியவர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!!

0

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது பட்ட தென்னை மரம் காற்றுக்கு பிரண்டு வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார், இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.