;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி மந்திகை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.