;
Athirady Tamil News

உலகில் அமைதியை நிலைநாட்டும் தேசத்தை உருவாக்க வேண்டும்- இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!

0

குஜராத் மாநிலம் வதோதராவில் சுவாமி நாராயண் கோவில் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சர்வதேச குழப்பங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், உலகில் அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்ட தேசத்தை உருவாக்க வேண்டும்.

இன்று நாம் புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்க விரும்புகிறோம். அதை செய்து முடிக்க நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா, தனது பழமையான மரபுகளை கடைபிடிக்கும்.

அதே வேளையில் புதிய முன்னோக்கு அடையாளத்தை கொண்டுள்ள உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா மாறியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.