;
Athirady Tamil News

சட்டமா அதிபரிடம் சீ.ஐ.டி ஆலோசனை !!

0

ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, கிரிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் சாத்தியமான சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்றையதினம் (25) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சீ.ஐ.டியினரால் அறிவிக்கப்பட்டதுடன், வழக்கை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு அமர்வுக்கு முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் இன்று (25) முன்னிலையாகியிருந்தார்.

இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்திய நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜே.வி.பியின் முன்னாள் எம்.பியான வசந்த சமரசிங்க வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

கிரிஷ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணத்தை நிறுவனத்தின் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தாமல் சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலோன் பிரிமியம் ஸ்போர்ட்ஸ் தலைவர் நிஹால் ஹேமசிறி பெரேராவிடம் இலங்கையின் ரக்பி அபிவிருத்திக்காக கிரிஷ் நிறுவனத்தால் 70 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிஹால் ஹேமசிறி பெரேராவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குக்கு கிரிஷ் நிறுவனம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் அவர், நாமல் ராஜபக்ஷவிடம் இரண்டு தடவைகளில் அந்தப் பணத்தை கொடுத்துள்ளதாகவும் நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

31ஆம் திகதியுடன் விமான நிலையங்கள் மூடப்படுமா?

சேவையில் இருந்து விலகுவதாக பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு..!!

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

இன்றைய டொலர் பெறுமதி!!

இலங்கையை கைவிட்டது உலக வங்கி !!

முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !!

பணவீக்கம்: இலங்கைக்கு மூன்றாவது இடம் !!

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்!! (படங்கள்)

இலங்கையின் அடுத்தகட்ட முயற்சி!!

பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவார் !!

மீண்டும் மொட்டு அரசாங்கம்; தேர்தலுக்கு செல்வதே சிறந்தது !!

தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்க பணிப்பு !!

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!! (வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய சந்திப்பு !!

பாராளுமன்ற குழுக்களின் அதிகாரம் அதிகரிப்பு !!

’கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவி’ !!

இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!!!

நான் வெட்கப்படுகிறேன் !!

சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் !!

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !!

இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்!!

’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு !!

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.