;
Athirady Tamil News

வரிசையில் நிற்காதீர்கள் !!

0

சமையல் எரிவாயு, அடுத்தவாரம் வரையிலும் சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், ஆகையால், எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கவேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, வந்துகொண்டிருக்கும் கப்பல், ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டை வந்தடையும். , கால அட்டவணையின் பிரகாரம் இறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின், மே 30 திங்கள்கிழமை எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை எமது நிறுவனம் சந்தைக்கு விநியோகிக்கவில்லை. ஆகையால், அடுத்த வாரம் வரை புதிய இருப்புக்கள் வழங்கப்படாது என்பதுடன் எரிவாயுக்காக, வரிசையில் நிற்கவேண்டாமென்றும் வாடிக்கையாளர்களிடம் லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.