;
Athirady Tamil News

பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு !!

0

கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இவர்கள் கொழும்பு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.