;
Athirady Tamil News

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி!! (படங்கள்)

0

வவுனியா நகரில் திடீரேன தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி : எரிபொருள் சேமிப்பு தாங்கியிலிருந்து பற்றியிருக்கலாம் என சந்தேகம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியோன்று இன்று (30.05.2022) காலை 10.30 மணியளவில் திடீரேன தீப்பற்றியேறிந்துள்ளது.

குறித்த இடத்தில் முச்சக்கரவண்டியினை சாரதி நிறுத்தி விட்டு அருகே சக நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன் போது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் தீப்பற்றியேறிவதினை அவதானித்த வீதியின் சென்ற நபர் ஒருவர் சாரதிக்கு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் சாரதி பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் முச்சக்கரவண்டியின் பின்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த தீ விபத்து முச்சக்கரவண்டியின் எரிபொருள் சேமிப்பு தாங்கியிலிருந்து பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.