;
Athirady Tamil News

தமிழ் அரசுக் கட்சியினரால் புங்குடுதீவில் உலருணவு வழங்கிவைப்பு!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருபவருமான திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 29/05/2022 அன்று புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் நாற்பது குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் , வேலணை பிரதேசசபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் மற்றும் தமிழ் அரசுக்கட்சியின் கனடா கிளை உபதலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.