;
Athirady Tamil News

சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை!!

0

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களிள் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சிரமங்களை முகங்கொடுத்த மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்திலேயே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.