;
Athirady Tamil News

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!! (வீடியோ)

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல் கட்டப் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 ஆம் திகதி வரை இந்த மதிப்பீடு நடவடிக்கைகள் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 9 ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்கள் இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக 32,368 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 23 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுடன் (01) நிறைவடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.