;
Athirady Tamil News

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!!

0

நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றும் நாடளாவிய ரீதியில் 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் 60 வீதம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விநியோகிக்கப்படவுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வருவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.