;
Athirady Tamil News

தெல்லிப்பழை வீட்டில் திருடிய குற்றத்தில் இருவர் கைது!!

0

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் கடந்த 28ஆம் திகதி எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பெறுமதியான பொருட்கள், நகைகள் என்பவற்றை திருடிச் சென்றிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் அளவெட்டி மற்றும் மாசியாப்பிட்டி பகுதிகளை சேர்ந்த இருவரைகைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.