;
Athirady Tamil News

சுப்பர் மடத்தில் குழு மோதல் – ஐவர் காயம்!!

0

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கொட்டடியை சேர்ந்த சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) , வியாபாரிமூலையை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) , சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39) மற்றும் தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கடற்தொழிலில் ஏற்பட்ட முரண்பாடே மோதலாக மாறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.