;
Athirady Tamil News

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்!!

0

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனினும், இன்றும் (03) பொதுமக்கள் மண்ணெண்ணெய் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.