;
Athirady Tamil News

நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அனுராக் தாக்கூர்..!!

0

உலக சைக்கிள் தினமான இன்று, நாடு முழுவதும் சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் போன்றவற்றில் மக்கள் இருந்து விடுபடவும், சைக்கிள் ஒட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 750 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மந்திரி அனுராக் தாக்கூர் சைக்கிள் ஓட்டிச்
சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.